மக்களுக்கு கௌரவமான வாழ்வியலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் எனறே தொடர்ந்தும் அரசியலில் இருக்கின்றேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, July 19th, 2020

இனத்தின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப்  போராட்டம் காரணமாக உயிரிழந்த அனைவரினதும் ஆத்மா சாந்தியடைய வேண்டுமெனில் வாழுகின்ற மக்களுக்கு கௌரவமான சிறந்த வாழ்வியலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டு சென்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பளை நகர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

நான் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப போராளி என்ற வகையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு தார்மீக பொறுப்பை ஏற்பதாகவும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வாழுகின்ற மக்களுக்கு கௌரவமான சிறந்த வாழ்வியலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே அயராது உழைத்துவருகின்றேன் என்றும் தெரிவித்தார். அத்துடன் அதன் காரணமாகவே தான் தொடர்ந்தும் அரசியலில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை சீர்குலைத்துவிடக் கூடாது – நாடாள...
தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி புலம்பெயர்தேச முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன் – ஊட...
நாச்சிக்குடாவில் கடலட்டைப் பண்ணை - அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் பூர்வாங்க வேலைகள் நிறைவு!