கொரோனா ஒழிப்பிலிருந்து வெளியேறும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்!
Friday, July 17th, 2020
கொரோனா ஒழிப்பு செயற்திட்டத்திலிருந்து தாம் விலகுவதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று மதியம்முதல் கொரோனா ஒழிப்பு செயற்பாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
மக்கள் இன்னல்களை சந்திக்காமலிருப்பதற்காக, பொதுச்சுகாதார பரிசோதர்களிற்கு கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரம் வழங்கப்படாது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
72 கொள்கலன்கள் சுங்கத்திணைக்களத்தால் தடுத்துவைப்பு..!
நோயாளி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சம்பவம்!
உளநலம் பாதிக்கப்பட்டவர்களை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தவேண்டாம் - தேர்தல் ஆணைக்குழு
|
|
|


