குசல் மென்டிஸிற்கு பிணை!
Monday, July 6th, 2020
விபத்தில் ஒரவர் பலியானதை அடுத்து கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
பாணந்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (06) முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாணதுறை, ஹொரெதுடுவ பகுதியில் நேற்று (05) அதிகாலை 5 மணிக்கு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையணியின் எதிர்காலம் சிறப்பாக அமையும் - சங்கக்கார!
இமாலய வெற்றியுடன் தொடரை சுவீகரித்தது இலங்கை!
அச்சுறுத்தும் பந்துவீச்சாளர்கள் இருப்பதுதான் இலங்கையின் பலம் - சொல்கிறார் டுபிளசி!
|
|
|


