தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் நலனகளில் கூடிய அக்கறை செலுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Sunday, June 14th, 2020
கொரோனா தாக்கத்தினால் இலங்கை தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் தொழில் வாய்ப்புக்கள் தடைப்பட்டு பொருளாதார சவால்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், இலங்கை தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் நலனகளில் அக்கறை செலுத்தும் வகையிலான அமைப்பு ரீதியான பதிவு செய்யப்பட்ட கட்டமைப்பு இருக்குமாயின் ஆரோக்கியமானதாக இருக்கும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த அமைப்பின் முதலாவது ஒன்றுகூடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது தொடர்பான உறுதிமொழிகளை வழங்கியதுடன் ஒரு பகுதினருக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கும் அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்து தடுப்பில் வைத்திருக்க உத்தேசமா? - டக்ளஸ் தேவானந்தா கேள்வி!
தமிழும் சிங்களமும் அரச கரும மொழிகளாதல் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!
உருத்திராட்ச மாலை அணிந்த பூனைககள் மக்களை தவறாக வழிநடத்த முற்படுகின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி....
|
|
|


