வலி கிழக்கு பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டினை பெற்றுக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Monday, May 25th, 2020

அண்மையில் வீசிய கடுங்காற்று காரணமாக கோப்பாய், நீர்வேலி, அச்செழு போன்ற பிரதேசங்களில் சுமார் ஐநூறு ஏக்கர் பிரதேசத்தி்ல் பயிரிடப்பட்டிருந்த
வாழை மரங்கள் முறிந்து அழிவடைந்துள்ளன.

இந்நிலையில் குறித்தபிரதேசத்திற்கான இன்று நேரடியாக சென்ற கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏற்பட்டுள்ள பல இலட்சம் ரூபாய் பெறுமதியான அழிவுகளை நேரடியாக அவதானித்தார்.

அத்துடன், ஏற்பட்ட அழிவுகள் தொடர்பான மதிப்பீடுகளை உடனடியாக மேற்கொண்டு தனக்கு வழங்குமாறு சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் யாழ். அரசாங்க அதிபர்
ஆகியோரை கேட்டுக் கொண்டார்.

மேலும், குறித்த மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்து அழிவுகளுக்கான நஸ்ட ஈட்டினை பெற்று தருவதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் உறுதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

வடக்கிற்கென தனியான வங்கி ஒன்றை நிறுவி மக்களுக்கு உதவவேண்டும் -  யாழ்.வர்த்தகர் சந்திப்பில் டக்ளஸ் தே...
மாகாணசபையில் எதுவும் இல்லை என்றவர் மீண்டும் முதல்வர் பதவிக்கு முண்டியடிப்பது ஏன்? - யாழில் ஊடகவியலாள...
20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை - கனேடிய உயர் ஸ்தானிகருக்கு எடு்துரைத்த...

புலம்பெயர் தேச உறவுகள்போல எம் தேச உறவுகளும் வாழும் சூழல் உருவாக வேண்டும் - காக்கைதீவில் டக்ளஸ் தேவான...
தேர்தல்கால பெறுபேறுகளை கொண்டு மக்களது அபிலாஷைகளை புறந்தள்ளப் போவதில்லை -  வவுனியாவில் டக்ளஸ் எம்.பி ...
வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு - அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் இடம்பெற்ற...