டெங்கு நோயக்கு எதிரான யுத்தம் பிரகடனம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Thursday, May 21st, 2020

டெங்கு தொற்றை நிறுத்துவதற்காக ஏடெஸ் நுளம்பைக் கட்டுப்படுத்தும் யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார்.

அத்துடன இந்த தருணத்தில் டெங்குவை கட்டுப்படுத்தாவிட்டால் இலங்கை மக்கள் இரண்டு பிரச்சனைகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் டெங்குவையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

கொரோனாவிற்கு காய்ச்சல் ஒரு குணங்குறியை போன்று டெங்குவுக்கும் காய்ச்சல் ஒரு குணங்குறியாக இருக்கும். எனவே பொதுமக்கள் குறிப்பாக நீர் நிலைகள் உள்ள இடங்களில் இருந்து டெங்கு நுளம்பு பரவலை தடுக்கவேண்டும் என்று அனில் ஜாசிங்க கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்க்கது.

Related posts:


இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், துவிச்சக்கர வண்டி விபத்துக்களால் 96 பேர் பலி - சைக்கிள் ஓட்டு...
அஞ்சல் திணைக்களத்தை நவீனமயமாக்க திட்டம் - வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவிப்பு!
வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர விசேட வேலைத்திட்டம் – துரிதப்படுத்துமாறு ஜனாதிப...