வெளிநாடு சென்று திரும்பிய நிலையில் நாடாளுமன்றின் படைக்கள சேவிதரும் தனிமைப்படுத்தல்!
Tuesday, May 12th, 2020
இலங்கை நாடாளுமன்றின் முக்கிய பதவிகளில் ஒன்றான படைக்கள சேவிதர் பதவியை வகித்து வரும் நரேந்திர பெர்னாண்டோ கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதி அவர் தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு தனது மனைவியுடன் நியூசிலாந்து சென்று கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார்.
பின்னர் கடந்த மே மாதம் 10ஆம் திகதி அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில் அவர் தனியார் ஹோட்டல் ஒன்றில் தனது சொந்த செலவில் னிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா - இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக பதில் ...
புதிய பொருளாதாரத்தை உருவாக்க முற்போக்கு சிந்தனை கொண்ட இளம் தலைமுறை அவசியம் - சாகல ரத்நாயக்க தெரிவிப்...
அரச உயர் அதிகாரிகள் சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு!
|
|
|


