பல்கலைக்கழகங்கள் மீளத் திறப்பது மீண்டும் ஒத்திவைப்பு – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
Tuesday, May 5th, 2020
பல்கலைக்கழகங்களின் கற்கைகளை மீண்டும் ஆரம்பிக்கப்படுவது மீண்டும் ஒத்திவைக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளையடுத்து பல்கலைக்கழக நடவடிக்கைகள் யாவும் கடந்த மார்ச் 13ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டன.
இந்நிலையில் பல்கலைக்கழகங்களின் கற்கை நடவடிக்கைகள் வரும் 11ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தது. எனினும் சுகாதாரத் துறையின் ஆலோசனையின்படி பாதுகாப்பான சூழல் ஏற்படும்வரை பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடியாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணையக்குழு இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அச்சுறுத்தல் தொடர்ந்தால் பரீட்சையை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாது – அமைச்சர் பீரிஸ்!
இலங்கைக்கு புதிய கடனை வழங்க தயார் - சீனா அறிவிப்பு!
தனியார்த்துறையின் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வேண்டும் - மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டு...
|
|
|


