இலங்கையில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
Tuesday, April 21st, 2020
அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 309 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, இதுவரை 98 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தையில் சுமார் 242 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1010 பேர் இராணுவ தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் குறித்த பகுதியில் பதிவாகி இருந்தமையே இந்த தனிமைப்படுத்தலுக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாணவர்களை கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளவதற்கான வர்த்தமானி அடுத்த மாதம் வெளியாகும்!
மானிப்பாயில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்: இளைஞன் படுகாயம்!
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சரவை எந்த தீர...
|
|
|
தொடரும் சீரற்ற காலநிலை - டெங்கு, வயிற்றுப்போக்கு நோய் பரவும் அபாயம் அதிகரிப்பு என பொது சுகாதார பரிச...
அதிக வெப்பநிலையுடனான நாள்களில் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிருங்கள் - சுகாதார அமைச்சினால்,...
உள்ளுராட்சி நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்க...


