கொரோனா தொற்றின் வீரியம் நாளுக்க நாள் அதிகரிப்பு: அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேற தற்காலிக தடை – அதிபர் டிரம்ப்பு!
Tuesday, April 21st, 2020
அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 7 இலட்சத்து 92 ஆயிரத்து 913 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 42,517 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கண்ணுக்கு தெரியாத எதிரியின் தாக்குதல் காரணமாகவும், அமெரிக்க குடிமகன்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கவும், வெளிநாட்டவர்கள், அமெரிக்காவில் குடியேறுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கும் உத்தரவில் நான் கையெழுத்திடுவேன் என தமது ட்விட்டர் பதிவின் ஊடாக டிரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
முகக்கவசம் அணியாதவர்களுக்கு எச்சரிக்கை!
எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தப்படும் - இலங்கை சிறுவர்களுக்கான வைத...
இலங்கையின் தேர்தல் முறை தொடர்பில் ஆராய்வதற்கும், கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் ஆர...
|
|
|


