காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு காலவகாசம் – அமைச்சர் மகிந்த அமரவீர!
Friday, April 17th, 2020
சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் மார்ச் 10 ஆம் திகதி மற்றும் ஏப்ரல் 15 ஆம் திகதிகளில் நிறைவடையும் சாரதி பத்திரங்களுக்கான செல்லுப்படியாகும் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றானது ஒழிப்பு நடவடிக்கை நிறைவடையும் வரை குறித்த சாரதி அனுமதிபத்திரங்கள் செல்லுப்படியாகும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்குது.
ஆனாலும் இது தொடர்பான பொலிஸாரின் நடைமுறைகளில் மாற்றங்கள் காணப்படவில்லை என்றும் இவ்வாறான காலாவதியான அனுமதிப்பத்திரங்களை வழமைபோன்றே பொலிசார் கையாள்கின்றனர் என்றும் பொதுமக்கள் குற்றம் சுமத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 447 ஆக உயர்வு!
19 ஆவது திருத்தச் சட்டம் ஒரு வெடிகுண்டு : 20 ஆவது திருத்தம் நிறைவேறும் – அதனால் தேசிய பாதுகாப்பிற்கு...
யாழ் போதனா வைத்தியசாலையிலும் இடநெருக்கடி : சுகாதார நடவடிக்கைகளை இறுக்கமாக பேணுவதுதான் மக்கள் சமூகத்த...
|
|
|


