உயிர்த்த ஞாயிறு நினைவேந்தல்கள் இரத்து – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
Thursday, April 16th, 2020
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடம் நிறைவுபெறுவதை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நினைவேந்தல் நிகழ்வுகளும் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையில் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையின் விசா அனுமதிப்பத்திர சேவை தொடர்பான தகவல்கள்!
விமான நிலையங்களை மீள திறப்பது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கப்படவில்லை - அமைச்சரவைப் பேச்சாளர் க...
வடக்கின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் 8 மணிமுதல் பணிப்புறக்கணிப்பு - நோயாளர்கள் அவதி!
|
|
|


