தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை – அமைச்சர் மகிந்த அமரவீர!
Thursday, April 9th, 2020
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் வருமானத்தை இழந்துள்ள தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவியை தொகையை வழங்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நிரந்தர வருமானம் இல்லாத நபர்களுக்கு அரசாங்கம் வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகையை தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அந்த கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி சாதமான பதிலை வழங்கியதாகவும் அமைச்சர் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 8 பேரும் இலங்கையர்கள் - கடற்படை!
அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் - போக்குவரத்து முகாமைத்துவ அமை...
உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் - பொதுத்தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணை...
|
|
|


