24 நாட்கள் கழித்து கொரோனா தொற்று – அதிர்ச்சியில் மக்கள்!
Sunday, April 5th, 2020
தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பி 14 நாட்கள் கண்காணிப்பில் இருந்து வீடு திரும்பிய மத்துகமையை சேர்ந்த ஒருவருக்கு 10 நாட்களின் பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது.
மார்ச் 10ம் திகதி தென்கொரியாவில் இருந்து விரும்பிய குறித்த நபர் விமான நிலையத்திலிருந்து கந்தக்காடு தனிமைப்படுத்த முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து மார்ச் 24ம் திகதி தனது வீட்டுக்கு திரும்பி உள்ளார்.
வீடு திரும்பிய 10 நாட்களின் பின்னர் வயிற்று வலி மற்றும் பிற அறிகுறிகளினால் நாகொட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சந்தேக நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது – பிரதமர் மகிந்...
வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஒன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கு வசதி - 2023 முதல் புதிய நடைமுறை என...
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று விசேட உரை!
|
|
|


