புலோலி பாடசாலைக்கு அருகில் மிதிவெடி!
Friday, July 22nd, 2016
புலோலி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில் மிதிவெடியொன்று நேற்று (21) மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலத்தில் ஓரளவு புதையுண்ட நிலையில் காணப்பட்ட இந்த மிதிவெடியை, அவ்வழியே சென்றவர்கள் அவதானித்து பருத்தித்துறை பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். இதனையடுத்து, விசேட அதிரடிப் படையினருடன் அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார், மிதிவெடியை மீட்டனர். விசேட அதிரடிப் படையினரால் மிதிவெடி செயலிழக்கச் செய்யப்பட்டது.
Related posts:
சீரற்ற வானிலை: தொற்று நோய்கள் பரவும் அபாயம் - தொற்றுநோய் தடுப்பு விசேட வைத்திய அதிகாரிகள்!
கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று - அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்...
இந்திய தனியார் துறையினருக்கு இலங்கையில் முதலிடுவதற்கு வாய்ப்பு - இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட...
|
|
|


