இலங்கையில் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள இரண்டு வங்கிகளுக்கு அனுமதி?

Thursday, January 2nd, 2020

இலங்கையில் தமது செயற்பாடுகளை நிறுத்திக்கொள்வதற்கு இரண்டு இந்திய வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் எக்ஸிஸ் ஆகிய வங்கிகளே அவையாகும்.

இலங்கையின் நீதிக்கு உட்பட்டு சராசரி கடன் விகிதத்தை குறைக்கவேண்டும் என்ற கட்டளையை இந்த இரண்டு வங்கிகளும் செயற்படுத்தவில்லை.

இதனையடுத்தே இந்த இரண்டு வங்கிகளின் அனுமதிப்பத்திரங்களையும் ரத்துச்செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது

எக்ஸிஸ் வங்கி 2011 இல் இலங்கையில் தமது செயற்பாடுகளை ஆரம்பித்தது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 2006ம் ஆண்டு இலங்கையின் வங்கித்துறையில் பிரவேசித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

காணமற்போனோர் விவகாரத்துக்கு அரசின் காத்திரமான நடவடிக்கைக்கு கனடாவின் அழுத்தம் அவசியம் - யாழ். ஆயர் !
அரச வைத்தியசாலைகளினால் விநியோகிக்கப்படும் மருந்துசீட்டுகளுக்கு ஒசுசல ஊடாக இலவச மருந்து விநியோகம்!
நாட்டில் இன்றும் நாளையும் பரவலாக மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் - வளிமண்டலவியல் திணைக்களம...

தமது குடியிருப்பு காணிகளுக்கு உரிமம் பெற்றுத்தருமாறு திருகோணமலை ஆனந்தபுரி பகுதி மக்கள் டக்ளஸ் தேவானந...
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமனம் - எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை அடையாள போராட்டம்...
உயர்தர பரீட்சை - பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட மேற்பார்வை அதிகாரிகளுக்கு அலைபேசி எடுத்து...