வெளியானது உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்: 181,126 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு!
Saturday, December 28th, 2019
2019ம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள்பரிசீலனை விண்ணப்பங்களை ஜனவரி மாதம் 15ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான தமது பெறுபேறுகளை https://doenets.lk/examresults இல் மாணவர்கள் பார்வையிட முடியும்.
அதேவேளை உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்வதன் மூலமும் பார்வையிட முடியும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கில் இன்று வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்!
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மீண்டும் இலங்கை மின்சார சபை அறிவுறுத்து!
யாழ் பல்கலை கலைப் பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் பிரதீபராஜா தெரிவு!
|
|
|
வர்த்தகரை அறைக்குள் பூட்டி தாக்கினார் மொத்த வியாபாரி : 85000 ரூபாவைப் பறித்ததுடன் காசோலையில் கையொப்ப...
தடை செய்யப்பட்ட அமைப்புக்களை புகழ்ந்து கருத்து வெளியிடுவதால் பொதுமக்கள் தவறான வழிக்கு கொண்டு செல்லப்...
வாகனங்களின் இறுதி இலக்கத்தின்படி இன்றுமுதல் எரிபொருள் விநியோகம் - மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு...


