டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட பிரிவு!
Monday, December 23rd, 2019
டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சில் விசேட ஆராய்ச்சி பிரிவொன்று அமைக்கப்படவுள்ளது. பாடசாலைகள் மற்றும் கட்டட நிர்மாண வளாகங்களில் டெங்கு நுளம்புகள் கூடுதலாக காணப்படுவதாக தெரியவந்துள்ளது..
இதனை கருத்திற் கொண்டு இந்த விசேட பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான சுற்றுநிருபங்களை வீடமைப்பு, நிர்மாணத்துறைஅமைச்சின் ஊடாக அமுல்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்
Related posts:
பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் விவசாயத்துறையை மேம்படுத்த முடியாது.
21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும்போது பட்டதாரி பயிலுனர்கள் பணிக்கு சமுகமளிக்க வேண்டும் - பொது நிர்...
யாழ் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான முழுமையான விபரம்!
|
|
|


