புகையிரத நிலையங்களில் பொதுக் கழிப்பறைகள் – நிதி அமைச்சு!

Friday, October 11th, 2019


புகையிரத நிலையங்களில் பொதுக்கழிப்பறைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் இந்த வருட பாதீட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீட்டின் படியே இந்த கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

பொல்கஹாவல, ரம்புக்கனை, ஹட்டன், புத்தளம், சிலாபம், திருகோணமலை, மட்டக்களப்பு, ஆகிய புகையிரத நிலையங்களிலேயே இந்த கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தவிர கடுகன்னாவ, பேராதெனிய, ஜாஎல ஆகியபுகையிரத நிலையங்களில் 9.3 மில்லியன் ஒதுக்கீட்டில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பாதீட்டில் பேருந்து நிலையங்கள் மற்றும் புகையிரத நிலையங்களில் கழிப்பறைகளை அமைக்க அரசாங்கம் 1 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

Related posts:

நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் சார்ந்த செயற்திட்டம் முன்னெடுப்பு - வடக்கிலும் விவசாயம் சார்ந்த செய...
ஊழல் முறைப்பாடுகள் : மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் 600 ஊழியர்கள் உடன் அமுலாகும் வகையில் ...
குற்றங்களை ஒழிப்பதற்கான விசேட நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறும் - பொலிஸ் விசேட அதிரடிப்படை அறிவிப்பு!