தேனிக்களால் நிறுத்தப்பட்ட கால்பந்து போட்டி!
Tuesday, July 19th, 2016
தேனிக்கள் கொட்டத் தொடங்கியதால், எக்வடார் நாட்டில் நடந்து கொண்டிருந்த கால்பந்துப் போட்டி ஒன்று இடைநிறுத்தப்பட்டது.
எக்வடார் நாட்டின், கையாக்வில் நகரில் , ரிவர் எக்வடார் மற்றும் ஔக்காஸ் அணிகளுக்கிடையே கால்பந்துப் போட்டி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது போட்டி தொடங்கிய 10வது நிமிடத்தில், தேனிக்கூட்டம் ஒன்று விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் கால்பந்து ரசிகர்களைக் கொட்டத்தொடங்கியதை அடுத்து , போட்டி நிறுத்தப்பட்டது.
கால்பந்து அணியினர் சுமார் அரை மணி நேரம் பொறுத்திருந்து பார்த்தனர். ஆனால் தேனிக்கூட்டம் சென்றபாடில்லை. எனவே மிச்சமுள்ள போட்டியை மறுநாளட் ஒத்திவைக்க நடுவர்கள் முடிவு செய்தனர். தேனிக்களை விரட்ட தீயணைப்புப் படையினரின் உதவி கோரப்பட்டிருக்கிறது.
Related posts:
செய்யாத தவறுக்கு தண்டனை வழங்கிய பரிசோதனை நிலையத்திற்கு மூடுவிழா!
இலங்கை - சிம்பாப்பே அணிகள் இன்று மீண்டும் மோதல்!
டக்வெத் லூவிஸ் முறை: 34 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி!
|
|
|


