மாகாணசபை தேர்தலை நடத்த முடியாது: உயர்நீதிமன்றம் ஜனாதிபதிக்கு விளக்கம்!
Tuesday, September 3rd, 2019
எல்லை நிர்ணய அறிக்கை இல்லாமல் பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடத்த முடியாது என உயர்நீதிமன்றம் ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளது.
எல்லை மீள்நிர்யண அறிக்கையில்லாமல் மாகாணசபை தேர்தலை நடத்தலாமா என உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி வியாக்கியானம் கோரியிருந்தார். இது தொடர்பாக கடந்த மாதம் 23ம் திகதி உயர்நீதிமன்றத்தில் விவாதம் இடம்பெற்றிருந்தது. எல்லை நிர்ணய அறிக்கை இல்லாமல் பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடத்த முடியாது என உயர்நீதிமன்றம் ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளது.
ஐந்த நீதிபதிகளை கொண்ட ஆயம் இந்த விவகாரத்தை ஆராய்ந்து, எல்லை மீள்நிர்ணய அறிக்கை இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது என ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
Related posts:
பருத்தித்துறை பிரதேச சபைக்கு புதிய கட்டடம்!
புகையிரத விபத்து: கடந்த இரண்டு வருடங்களில் 323 பேர் பலி!
பிரதமரின் தலைமையில் தேசிய மூலோபாய விருது வழங்கும் விழா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது!
|
|
|


