இரு அமைச்சு பதவிகளில் திருத்தங்கள்!
Friday, July 26th, 2019
அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார வகிக்கும் அரச நிர்வாக இடர் முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுப் பதவி அரச நிர்வாக, இடர் முகாமைத்துவம் மற்றும் பண்ணை வள அபிவிருத்தி அமைச்சு பதவி என்பதாக திருத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அமைச்சர் பீ.ஹரிசன் வகிக்கும் விவசாய, பண்ணை வள அபிவிருத்தி, நீர்ப்பாசன மற்றும் மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி அமைச்சுப் பதவி விவசாய, கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசன மற்றும் மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சுப் பதவியாக திருத்தப்பட்டுள்ளது.
இவ்விரு அமைச்சர்களுக்கும் புதிய நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
Related posts:
10 பேருடன் மட்டும் வெளிநாடு செல்லும் ஜனாதிபதி !
இலங்கையின் பயிர்ச் செய்கையை அதிகரிப்பதற்குத் தேவையான தரமான விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கான யோசனைக்கு...
நாடு முழுவதும் கடும் வறட்சி – 2 இலட்சத்து 10 ஆயிரத்து 798 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய...
|
|
|


