கச்சதீவில் ஆலய கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!
Friday, July 15th, 2016
கச்சதீவில் புதிய அந்தோனியார் ஆலயத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயமானது இலங்கை அரசாங்கத்தினதும், யாழ் மறை மாவட்டத்தினுடைய நிதி ஒதுக்கீட்டுடனும் கட்டப்பட்டு வருகின்றது. கடந்த மே மாதம் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டபோது தமிழ் நாட்டிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியது.
புனித அந்தோனியார் கோவில் திருவிழாவில் தமிழக மீனவர்களும் கலந்துகொள்வதால் தமிழக மீனவர்களினதும் பங்களிப்பு இந்த ஆலயத்திற்கு முக்கியம் என தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே குறித்த தேவாலயமானது மீண்டும் அடுத்த திருவிழாவிற்கு முன்பாக கட்டிமுடிக்கப்பட வேண்டுமென்ற யாழ் ஆயரின் பணிப்புக்கமைய விரைவாக கட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வடக்கில் மேலும் 13 பேருக்கு கொவிட்-19 தொற்று: மருத்துவர் கேதீஸ்வரன்!
வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது!
சவால்மிக்க காலங்களில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்கும் - ஐ.நா ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள...
|
|
|


