மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி – பல கடைகள் பாதிப்பு!

Friday, July 19th, 2019

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கினிகத்தேனை நகரில்  நேற்று இடம்பெற்ற மண்சரிவு காரணமாக 10 கடைகள் அடங்கிய கட்டிடத் தொகுதி முற்றாக சரிந்து அனர்த்தத்திற்குள்ளாகியது.

இந்த நிலையில் அக்கடைகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்ட நிலையில் காணாமல் போயிருந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை முதல் தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், பொது மக்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்குண்டு இருந்த கினிகத்தேனை பகுதியை சேர்ந்த 60 வயதான கே.எம். ஜமால்டீன் என்ற நபரே சடலமாக இன்று காலை 9 மணியளவில் மீட்கப்பட்டுள்ளார்.

Related posts:

கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்தது – தொற்றாளர் எண்ணிக்கையும் 4 இலட்சத்து 40 ஆயிர...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை விசேடமாக நாடாளுமன்றம் கூட்டப்படாது - ...
ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 63 சதவீதமான மக்கள் காலநிலை மாற்றத்தை 'பூகோளத்தின் அவசரநிலையாக இனம் கண்ட...

எதிர்கால சந்ததியினரை சிறந்த முன்னோடிகளாக மாற்றியமைக்க அனுபவங்கள் பாடமாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி!
ஜனாதிபதி தலைமையில் ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடையிலான விசேட கூட்டம் இன்று!
தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே தரைவழிப் பாலம் - ஆய்வு நடைபெற்று வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால...