போர்க்குற்ற நீதிமன்றம் ஸ்தாபிக்கப்படமாட்டாது – நீதி அமைச்சர் !

Thursday, July 14th, 2016

நாட்டில் போர்க் குற்ற நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பமாட்டாது என நீதி அமைச்சர் விஜயதாசராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுயாதீனத்தன்மை பௌதீக ஒருமைப்பாடு இறைமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் அரசாங்கம் எந்தவிதமான தீர்மானத்தையும் எடுக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துருகிரிய – பனாகொட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் போர்க் குற்ற நீதிமன்றம் உருவாக்கப்பட உள்ளதாக செய்யப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். குற்றம் சுமத்தும் தரப்பினர்களே இந்த நீதிமன்றம் எப்போது எவரால் எவ்வாறு அமைக்கப்படும் என்பதனை விளக்க வேண்டும் அரசாங்கம் அதுபற்றி விளக்க வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


உள்ளக முரண்பாடுகளால் யாழ். பல்கலைக்கழகத்தில் புதிய கற்றை நெறியை ஆரம்பிப்பதில் இழுபறி நிலை!
இந்தியா வழங்கிய கடனின் ஒரு தொகுதி மீளச் செலுத்தப்பட்டது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட...
ரணில் வெற்றியீட்டினால் நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் - ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகால ரட்...