கோர விபத்து – இத்தாவில் பகுதியில் இருவர் பலி!
Thursday, July 4th, 2019
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் மரக்கறிகள் ஏற்றி யாழ் நோக்கி பயணித்த லொறி ஒன்றும் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே லொறி சாரதியும் டிப்பர் வாகன சாரதியும் உயிரழந்துள்ளனர்.
இதுதொடர்பான மேலதிக விசாரணையினை பளை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் முதற்கட்ட விசாரணையில் லொறியினை செலுத்திவந்த சாரதி மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளதாக பளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கூறினர்.
Related posts:
சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்தவர்கள் கைது!
மின்சார வாகனங்களை அதிகமாக அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
இலங்கை வந்த உலக வங்கிக் குழு, இன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்!
|
|
|


