8 ஆயிரம் மாணவர்கள் இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு !
Monday, July 1st, 2019
ஆகஸ்ட், செப்ரெம்பர் மாதங்களில் கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை தற்போது இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 8 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். ஏனைய வருடங்களிலும் பார்க்க மாணவர்களின் எண்ணிக்கை இம்முறை 2 மடங்காக அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.
தற்போது இந்தக் கல்லூரிகளில் 4200 பேர் பயிற்சிகளைப் பூர்த்தி செய்துள்ளனர். இவர்கள் பிரதேச செயலக மட்டத்தில் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்னாயக்க மேலும் தெரிவித்தார்.
Related posts:
இன்றும் நாட்டின் பல இடங்களில் தொடரும் மழையுடனான காலநிலை – வளிமண்டலவியல் திணைக்கம் எதிர்வு கூறல்!
இலங்கையின் மிக அழகிய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் விரைவில் மக்கள் பாவனைக்கு !
உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது - அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை...
|
|
|


