யாழில் மாதா சொருபம் உடைப்பு!
Monday, June 17th, 2019
அரியாலைப் பகுதியில் மாதா சொருபம் இனம்தெரியாத விக்ஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.
அரியாலை, மணியந்தோட்டத்திலுள்ள உதயபுரம் கடற்கரை வீதியில் உள்ள மாதா சொரூபமே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 1 மணியளவில் கடற்தொழிலுக்காக சென்றவர்கள் வீதியில் மாதா சொரூபம் உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்து, பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
மக்கள் சேவைத்திட்டம் பயனுள்ளதாக அமையும் - யாழ் மாவட்ட செயலர்!
நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் வசதிகளை வழங்க விஷேட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரமேஷ் பத்திரன ...
சீரற்ற காலநிலையினால், நாடளாவிய ரீதியில் 7 ஆயிரத்து 61 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெ...
|
|
|


