மீண்டும் கராச்சிக்கான விமான சேவை ஆரம்பம்!
Saturday, June 1st, 2019
பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரான கராச்சிக்கான பயணத்தை ஸ்ரீலங்கன் விமான சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கவிருக்கிறது.
இரு நாடுகளுக்கிடையிலான இந்த விமான சேவை வாரத்தில் ஐந்து நாட்களுக்கு இடம்பெறுகின்றன. செவ்வாய் வியாழன் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சேவைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கான பல்வேறு விமான சேவைகள் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி தற்காலிகமான இடை நிறுத்தப்பட்டன.
இடைநிறுத்தப்பட்ட சேவை மீண்டும் இன்று ஆரம்பமாகிறது. ஸ்ரீலங்கன் விமான சேவை ஆயிரத்திற்கும் அதிகமான நகரங்களுக்கு விமான சேவையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர கைது!
இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை மிக நெருக்கமாகவே பேணி வருகின்றோம் - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்த...
புதிய தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச் சீட்டுகள் வழங்கப்படாது – குடிவரவு குடியக...
|
|
|


