விகாரையில் பாரிய தீப்பரவல்!
Friday, May 17th, 2019
மொரட்டுவை – கட்டுபெத்த வீதியில் உள்ள ஸ்ரீ ஞானவிமலாராம விகாரையில் உள்ள இரண்டு மாடி கட்டிடமொன்றில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீப்பரவலால் அந்த கட்டிடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீப்பரவலை மொரட்டுவை பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து அணைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மின்சார கசிவால் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Related posts:
அதிபர்களுக்கு உள்ளக பயிற்சி ஆரம்பம்!
எரிவாயுக் கசிவு வெடிப்புச் சம்பவங்களால் பாதிப்புற்றோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை - நுகர்வோர் பாது...
யாருடைய நம்பிக்கையையும் உடைய இடமளிக்க மாட்டேன் - முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு!
|
|
|


