சட்டவிரோத கூரிய ஆயுதங்கள் ஒப்படைக்கும் கால அவகாசம் நீடிப்பு!
Monday, May 6th, 2019
சட்டவிரோத வாள்கள், கூரிய கத்திகள் மற்றும் இராணுவ சீருடைக்கு ஒப்பான ஆடைகளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும் காலம் மேலும் 48 மணித்தியாலங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.
அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் குறித்த ஆயுதங்களை ஒப்படைக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஆயுதங்கள் மற்றும் சீருடைகளை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்காக கடந்த சனிக்கிழமைமுதல் இரண்டு நாட்கள் காலவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அது இன்று(06) நள்ளிரவுடன் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே மேலும் 48 மணிநேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெற்றோல் விலைகளை ஒக்டோபர் முதல் அதிகரிக்கும் - ஐ.ஓ.சி!
போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்க வேண்டியுள்ளது - பிரதி சுகாதார நோயாளிகளின் பணிப்பாளர் ...
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மே மாதம் முதல் வாரத்தில் வெட்டுப்புள்ளி வெளியாகும...
|
|
|


