மீண்டும் மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு!
Saturday, July 9th, 2016
மத்திய வங்கி ஆளுநர் உட்பட அதன் பணிப்பாளர் சபைக்கு மீண்டும் கோப் குழு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளது.மத்திய வங்கியில் நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்து ஆராய்வதே நோக்கத்திலே மீண்டும் அழைப்பு விட முடிவு செய்துள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் கந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதனை கூற வாய்ப்புள்ளதாகவும், அவற்றைத் தீர்க்க கோப் குழு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும், அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
மேலும், எதிர்வரும் 12 ஆம் திகதி கோப் குழுவில் ஆஜராகுமாறு, மீண்டும் அவர்களை அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த 7ஆம் திகதி மத்திய வங்கி அதிகாரிகள் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீதிபதியின் முறைப்பாடு குறித்து பிரதம நீதியரசருடன் பேச்சு!
கோண்டாவில் ஐயப்பன் சுவாமி வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிதம் செய்தார்!
அதி வேக நெடுஞ்சாலை போக்குவரத்துக்களையும் மட்டுப்படுத்த நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹ...
|
|
|


