வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேர் கைது!
Tuesday, April 16th, 2019
மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 வாள்கள், ஒரு சுழியோடிக் கண்ணாடி மற்றும் 2 உந்துருளிகள் கைப்பற்றப்பட்டன.
குறித்த சந்தேகத்துக்குரியவர்கள் வாள் வெட்டு சம்பவங்களுக்கு செல்லும் போது சுழியோடி கண்ணாடியை அணிந்தவாறு செல்வது அவர்களது கைபேசியில் மீட்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Related posts:
வித்தியாவின் கொலை வழக்கு 12 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
ஜனாதிபதியின் விஷேட உத்தரவு - யாழ் சிறையில் 110 பேருக்கு விடுதலை!
இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெணியான் காலமானார்!
|
|
|
இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்குவதை கண்காணிக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்தும் தீவிரமா...
நாடளாவிய ரீதியில் புகையிரத நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு - பொது மக்களின் பாதுகாப்புக்காக 32 புகைய...
டில்லிக்கு அழைக்கப்படும் இலங்கையின் புதிய ஜனாதிபதி – பாரத பிரதமர் மோடியின் செய்தியுடன் இலங்கை வருகிற...


