சீனாவில் சுரங்கப்பாதையில் வெடிவிபத்து – 7 பேர் உயிரிழப்பு!
Friday, April 5th, 2019
சீனாவில் சுரங்கத்துக்குள் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் கியாசூ மாகாணத்தில் உள்ள பீஜி மற்றும் சிச்சுவான் மாகாணத்தின் தின்கிங்யாபின் நகரங்களை இணைக்கும் அதிவிரைவு நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இதன்போது, சற்றும் எதிர்பாராத வகையில் சுரங்கத்துக்குள் வெடிவிபத்து ஏற்பட்டதில், அதனை தொடர்ந்து சுரங்கம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
Related posts:
பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய வீரரை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்!
ஏமனில் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் 3 மில்லியன் குழந்தைகள் பாதிப்பு!
பிலிப்பைன்சில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவுள்ளாரா ரொட்ரிகோ?
|
|
|


