நெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் – அமைச்சர் ரவி கருநாயக்கா!

Thursday, March 21st, 2019

நெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்திநிலையம் அமைக்கப்பட்டு அந்தப்பிரதேச மக்களின் மின் தேவை நிறைவு செய்யப்படும் என்று மின்வலு மற்றும் சக்தி வளத்துறை அமைச்சர் ரவி கருநாயக்கா தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்த பின்னர் இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.

நெடுந்தீவில் சுமார் 4 ஆயிரத்து 500 பேர் வசிக்கின்றனர். அவர்களுக்கு மின் தேவையை நிறைவேற்ற வேண்டும். அதற்கு நெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதில் முதற்கட்டமாக அங்கு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான கேள்வி கோரல் விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ரவி கருநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts:

எதிர்வரும் 12 ஆம் திகதி ஒரு இலட்சம் ரஷ்ய தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கும் - அரச மருந்தாக்கல் கூட்...
வடக்கு - கிழக்கு மக்களுக்கென விசேடஅதிஷ்ட இலாபச்சீட்டு - அபிவிருத்தி லொத்தர் சபையினால் அறிமுகம்!
தொடர்ந்தும் நட்டத்தை சந்தித்து வரும் அரச ஊடகங்கள் - ஊடக விவகாரங்களுக்கான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு...