நாட்டில் உள்ள ஆறு பேரில் ஒருவருக்கு நோய்!
Thursday, July 7th, 2016
இலங்கையில் ஆறு பேரில் ஒருவருக்கு ஏதேனும் நீண்ட நாள் நோய் காணப்படுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அதாவது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 18 வீதமானவர்கள் ஏதேனும் ஓரு வகை நீண்ட கால நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை குடிசன மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களத்தினால் இந்த மதிப்பீட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
நீரிழிவு, இரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்று நோய், பக்கவாதம், உள நோய், மூட்டு வலி உள்ளிட்ட நீண்ட கால நோய்களினால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, 15 வயதுக்கும் குறைந்த சிறுவர் சிறுமியருக்கு அதிகளவில் தொற்று நோய்களே பரவுகின்றன என தெரிவிக்கப்படுகிறது
Related posts:
புதிய அரசாங்கத்தில் அரசியலமைப்பை மாற்றுவோம் - நிதி அமைச்சர்!
உதவி ஆசிரியர்கள் ஆட்சேர்ப்புக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு - செயலாளர் ஜோசப் ஸ்டார்லின்!
அனைத்து நபர்களின் வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பொலிஸாருக்கு ...
|
|
|


