வடக்கில் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு!
Monday, February 18th, 2019
வட மாகாணத்தில் ஏற்பட்ட வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபை தெரிவித்தது.
வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் சுமார் 11,000 விவசாயிகள் வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 21 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தினால் சேதமடைந்ததாகவும் சபையின் பணிப்பாளர் நாயகம் பந்துக வீரசிங்க குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்குவதற்கு 400 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
Related posts:
வீதியோரம் குப்பை கொட்டினால் நடவடிக்கை வவுனியா நகரசபை செயலாளர் அறிவுறுத்து!
இலங்கையில் சிறு வணிக முயற்சிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா உதவித் திட்டம்!
மூச்சு எடுப்பதற்கு சிரமம் - மூளாய் – வேரம் பகுதியில் பெண் ஒருவர் பலி - மோட்டார் சைக்கிளில் பயணித்த க...
|
|
|


