காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு – விமானசேவைகள் இரத்து!
Friday, February 8th, 2019
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், பனிப்பொழிவு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய 27 விமானங்களில் 15 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலமை சீராகும் பட்சத்தில் பிற விமானங்கள் சேவை தொடங்கும் எனக்கூறப்படுகிறது. எனினும், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், இதற்கான சாத்தியம் மிகவும் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பிரான்சில் தமிழர் படுகொலை: நான்கு இலங்கையர்கள் கைது!
சீனாவின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு 10 ஆண்டுகள் சிறை!
தொடர் குண்டு வெடிப்பு - நேபாள கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பேற்பு!
|
|
|


