குடிவரவு – குடியகல்வு பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை!
Saturday, February 2nd, 2019
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு – குடியகல்வு பணிகள் தாமதமடைவதைத் தடுப்பதற்காக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய குடிவரவு – குடியகல்வு மற்றும் சுங்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் வழிநடத்த விமான நிலையத்தில் பல்வேறு நிலையங்களை அமைப்பதற்கும் அறிவிப்புப்பலகை, வர்ண சமிக்ஞைகளை தேவையான இடங்களில் பொருத்தவும் அமைச்சர் அர்ஜீன ரணதுங்க அறிவுரை வழங்கியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்மூலம் விமான நிலையத்தில் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு பயணிகளுக்கு அதிகம் வசதிகளைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த அமைச்சுத் தெரிவித்துள்ளது.
Related posts:
மாணவனை காணவில்லை என முறைப்பாடு!
கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 21 ஆயிரம் பேருக்கு டெங்கு!
பேருந்து தரிப்பிடங்கள் அமைக்கப்படும்போது மக்களின் நலன்கள் முன்நிறுத்தப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் ...
|
|
|


