விமானம் – ஹெலிகாப்டர் மோதி கோர விபத்து – 7 பேர் பலி!
Monday, January 28th, 2019
ஹெலிகாப்டரும் பயிற்சி விமானமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைக்கு அருகே அஸ்டா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.
அங்கு உள்ள மலையில் ஏறுவதற்காக 4 பேர் ஹெலிகாப்டரில் சென்றனர்.
இதற்கிடையே பயிற்சி விமானிகள் 3 சிறிய ரக விமானத்தில் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, சற்றும் எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரும் பயிற்சி விமானமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 2 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ட்ரம்பின் பேச்சை மீறிய சீனா - 500 யுத்த கப்பல்களுடன் போர் பயிற்சி!
வலுவான நிலையில் இலங்கை!
12 வயதிற்கு மேற்பட்டவர்கள் முகக்கவசங்களை அணிவது அவசியம் - உலக சுகாதார ஸ்தாபனம் !
|
|
|


