தைப்பொங்கல் தினத்தன்று நீரில் மூழ்கி 8 பேர் மரணம்!
Friday, January 18th, 2019
தைப்பொங்கல் தினமான நேற்று முன்தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் கடலிலும் குளங்களிலும் குளித்தபோதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 5 பேர் இளைஞர்கள் எனவும் 2 பேர் குடும்பஸ்தர்கள் எனவும் ஒருவர் சிறுவன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை திருகோணமலை, சங்கமித்தை கடற்கரையில் நேற்று முன்தினம் சுழிக்குள் சிக்குண்ட நால்வரை திருகோணமலைப் பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்டவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Related posts:
மாணவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்கும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு!
அறத்தின் ஆட்சியையும் ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறித்து நிற்கிறது தீபாவளி திருநாள்- வாழ்த்துச் செய்தி...
ஓகஸ்ட் மாதம் முதல் கட்டணமீற்றர் பொருத்தாக ஓட்டோக்கள் சேவையில் ஈடுபடமுடியாது - !யாழ்அரச அதிபர் அறிவிப...
|
|
|


