யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற அதிசொகுசு பேருந்து கோர விபத்து: நால்வர் பரிதாப பலி!
Thursday, November 29th, 2018
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 23 பேர் படுகாயமடைந்துள்ளதமாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புத்தளம் நாத்தாண்டியா பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Related posts:
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் செயல்திறனை அதிகரிக்க முயற்சி!
நெஞ்சு வலி: நடுக்கடலில் மீனவர் பலி!
இலங்கையர்கள் அனைவரும் கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ கோ...
|
|
|


