உணவுப் பாசல் விலை 10 ரூபாவால் குறைகிறது!
Saturday, November 3rd, 2018
நாட்டிலேற்பட்ட ஆட்சிமாற்றத்தை அடுத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைவடைந்தமைக்கு அமைய, உணவுப் பக்கற்றின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து அனைத்து உணவகங்களுக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சங்கத்தின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் கூறியுள்ளார்.
ஒரு கிலோகிராம் பருப்பின் மீதான விசேட வர்த்தக வரி 5 ரூபாவினாலும் ஒரு கிலோகிராம் கடலை மீதான வரி 5 ரூபாவாலும் ஒரு கிலோகிராம் உழுந்தின் மீதான வரி 25 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
கோதுமை மா மீதான தீர்வை வரி சலுகை 6 ரூபாவில் இருந்து 9 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இறக்குமதி செய்யப்படுகின்ற சீனி மீதான வரியும் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு
அரசின் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் - யாழ் மாவட்ட செயலாளர் நாகலிங்...
இலங்கையுடன் உடன்படிக்கைக்கு வர மீண்டும் பேச்சுவார்த்தை - சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!
|
|
|


