புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளை சிவில் உடையில் சேவை- அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!
Wednesday, October 10th, 2018
புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளை சிவில் உடையில் சேவையில் ஈடுபடுமாறு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் புகையிரத சேவையின் தரத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
30 வருடங்களுக்கும் அதிக காலமாக பல்வேறு காரணங்களினால் பதவியுயர்வுகளைப் பெறாத புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் 284 பேருக்கு, சார்ஜன்களாக பதவியுயர்வு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தபோது, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் சிவில் ஆடையில் சேவையில் ஈடுபடும்போது, அநேகமான குற்றச்செயல்கள் அடையாளம் காணப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இணைய வசதியை இலங்கைக்கு கொண்டுவந்த மகிந்த ராஜபக்சவை ” மைனா ” என்கிறார்கள் – நாமல் ஆதங்கம்!
“வர்த்தக நட்பு சூழலை” உருவாக்கும் நோக்குடன், ஏழு செயலணிகள் - ஜனாதிபதி அலுவலகம் அறிவிப்பு!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து - கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும...
|
|
|


