அரச கூட்டுக்குள் குழப்பம்?
Monday, September 10th, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி எந்தக் கட்சியாலும் ஆட்சியமைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்தானது தெற்கு அரசியலில் பெரும் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பிலும் பல கட்சிகளும் பலகோணங்களில் கருத்துகளை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் ஜனாதிபதியின் அறிவிப்பானது நகைச்சுவை அறிவிப்பு என்று ஐக்கிய தேசியக் கட்சி விமர்சித்துள்ளது.
அக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்களாலேயே மேற்படி கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. “தனித்து ஆட்சியமைப்பதற்குரிய சக்தி ஐ.தே.கவுக்கு இருக்கின்றது.
எமது கட்சியின் ஆசியுடனும் தலைவரின் விட்டுக்கொடுப்பாலேயுமே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார். இதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
எனவே பலவீனமடைந்த நிலையில் தற்போது இருப்பதாலேயே எதைப் பேசுவது என்று புரியாமல் மைத்திரி உளறுகின்றார்” என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
Related posts:
ஆழிப்பேரலை : இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு!
மாணவர்களை காப்பாற்றிய இலங்கை விமானிகளின் பிள்ளைகளை புறக்கணிக்கும் பாடசாலைகள்!
முறையான முகாமைத்துவ உடன்படிக்கையின் கீழ் நெடுஞ்சாலைகளின் தினசரி செயற்பாடுகள் மற்றும் முகாமைத்துவம் ...
|
|
|
சீனாவில் 113 பயணிகளுடன் வானில் பறந்து கொண்டிருந்த போயிங் ரக விமானம் மலைப் பகுதியில் விழுந்து விபத்து...
புலமைப்பரிசில் பெறுபேறுகள் மீள் மதிப்பீட்டு - பரீட்சை திணைக்களத்திற்கு அருகில் ஏற்பட்ட பரபரப்பான சூ...
தேசியப் பாடசாலைகளுக்காக 1,706 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் - கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!


