புலமைப் பரிசில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நிறைவு!

Monday, September 3rd, 2018

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், தற்போது பெறுபேறுகள் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தர பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பிடும் முதலாம் கட்ட பணிகள் நேற்று முன்தினத்துடன் (01) நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 3,55,326 மாணவர்கள் தோற்றினர். இதில், 87,556 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் தோற்றியிருந்தனர்.

புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதீப்பீட்டு பணிகள் கடந்த 15ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை 428 மதிப்பீட்டு சபைகளின் கீழ் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், உயர்தரப் பரீட்சை விடைத்தாள் முதற் கட்ட மதிப்பீட்டு பணிகள் கடந்த 23ஆம் திகதியிலிருந்து, இந்த மாதம் 5ஆம் திகதி வரை 37 பாடசாலைகளில் முன்னெடுக்கப்படுவதுடன், இதனால் குறித்த 37 பாடசாலைகளும் எதிர்வரும் 6ஆம் திகதியே மூன்றாம் தவணைக்காக திறக்கப்படவுள்ளது.

Related posts:

தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளா் ஒருவருக்காக 523 ரூபா செலவு தோ்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான ...
பாடசாலை ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் கோவிட் தடுப்பூசி - ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்ச...
வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்த தாழமுக்கம் - மழையுடன் கூடிய வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்கள...

அனைத்து அரச ஊழியர்களையும் இன்றுமுதல் பணிக்கு அழைப்பதற்கு நடவடிக்கை - பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு...
07 பில்லியன் ரூபாய் இருந்தால் அதனை கையிருப்பில் வைத்து நாட்டை இயல்பு நிலைக்கு மீட்பேன் - பொருளாதார அ...
கடற்றொழில் அமைச்சினால் புதிய சட்ட திருத்தங்கள் அறிமுகப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட...