சிறுவர் பாதுகாப்பு நிலையங்களை தரமுயர்த்த திட்டம்!
Thursday, August 30th, 2018
நாட்டில் தற்போது இயங்கிவரும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்களில் பல குறைபாடுகள் நிலவுவதாகவும், சில சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள் வியாபார நோக்கில் இயங்கி வருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எச். அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சிறுவர் பாதுகாப்பு நிலையங்களைத் தரமுடையதாக அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
அனைத்து சிறுவர் பாதுகாப்பு நிலையங்களும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாகவும் நாடு முழுவதிலும் முறையற்ற விதத்தில் இயங்கும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் எச். அபேரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
நாடாளுமன்றை அச்சுறுத்தும் கோரோனா: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் பி.சி.ஆர்.பரிசோதனை!
பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - பெப்ரல் அமைப்பு தேர்தல்...
மத்திய வங்கியோ அல்லது நிதி அமைச்சோ அரசியலமைப்பை மீறியிருந்தால், நீதிமன்றத்தை நாடுவதே பொருத்தமானது - ...
|
|
|


