இந்தியவின் 72வது சுதந்திரதினவிழா யாழ்ப்பாணத்தில்!
Wednesday, August 15th, 2018
யாழ் இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடுசெய்திருந்த யாஇந்தியவின் 72வது சுதந்திரதினவிழா ழ் கச்சேரி வீதியிலுள்ள இந்திய இல்லத்தில் இன்று காலை இடம்பெற்றது
இதன்போது யாழ் இந்திய உயர்ஸ்தானிகர் சங்கர் பாலச்சந்திரன் இந்திய தேசியக்கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்
அத்துடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சுதந்திரதின உரையினை உயர்ஸ்தானிகர் வாசித்ததுடன் வடக்கில் இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் உரையாற்றினார்.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் வடமாகாண ஆளுனரின் செயலாளர் இளங்கோவன் வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



Related posts:
இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரது பதவிகள் மாற்றியமைப்பு!
வெள்ளிக்கிழமைகளில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூடப்படும் - மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள...
அணிசேரா நாடுகளின் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, உகண்டா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!
|
|
|


