ஆசிய பிராந்திய பேரவை 300 மில்லியன் டொலர் நிதி உதவி!
Tuesday, August 7th, 2018
பாதுகாப்பு உறவு அடிப்படையில் இலங்கைக்கு நிதியுதவி அளிக்க முடியும் என்று ஆசிய பிராந்திய பேரவை தெரிவித்துள்ளது.
இது குறித்து பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தமது உதவித் திட்டத்தின் கீழ் சுமார் 300 மில்லியன் டொலர்களை பாதுகாப்பு உறவு விருத்திக்காக நாடுகளுக்கு வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
இதன்கீழ் கடல் பாதுகாப்பு, அமைதி காப்பு பணிகள், போதைவஸ்து ஒழிப்பு போன்றவற்றுக்கு நிதியை வழங்க முடியும் என்றும் ஆசிய பிராந்திய பேரவை குறிப்பிட்டுள்ளது.
ஆசிய பசுபிக் பிராந்தியங்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆசிய பிராந்திய பேரவை 1993ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவை முன்னிட்டு 7 ஆம் திகதி முதல் வீதித் தடை ! - யாழ். மாநகர சபை ஆணையா...
வைத்தியர்கள் பயணம் செய்த சொகுசு வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலுடன் மோதி விபத்து!
டோக்கன் முறையானது அமைச்சின் தலையீட்டினால் மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல - மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்...
|
|
|


