தனியார் வகுப்புகள் 31ஆம் திகதிக்கு பின்னர் தடை!
Wednesday, July 18th, 2018
எதிர்வரும் க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்களை இம்மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பீ.பூஜித தெரிவித்துள்ளார்.
அதன்படி, அன்று நள்ளிரவுக்கு பின்னர் தனியார் வகுப்புக்களை நடாத்துவது, பிரச்சாரங்கள் மேற்கொள்வது மற்றும் கருத்தரங்குகள் நடாத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நிறைவு பெறவுள்ளதோடு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் 321,469 பேர் விண்ணப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
மன்னிப்பு கேட்ட மார்க் ஜூக்கர்பெர்க்!
திரையரங்குகளில் தேசிய கீதம் - தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம்!
2020 ஆம் ஆண்டு ஜனவரியில் மாணவர்களுக்கான சீருடை வழங்கும் பணிகள் - அமைச்சர் டலஸ் அழகப்பெரும!
|
|
|


